விருது விழாவில் மேடையில் சுழன்று சுழன்று சிலம்பம் சுத்திய ஜோதிகா! அம்மாடியோவ் செம வீடியோ உள்ளே.!
நடிகைகளை கௌரவகிக்கும் விதமாக ஒவ்வொரு வருடமும் JFW திரைப்பட விருதுகள் நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்ற இந்த விருது விழாவில், பல்வேறு பட்டியலின் கீழ் நடிகைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.நடிகை ஜோதிகா வாலி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.இந்த திரைபடத்திற்கு பிறகு பூவெல்லாம் கேட்டு பார் திரைப்படத்தில் நடிகர் சூர்யா உடன் ஹீரோயினாக நடித்தார்.இந்த திரைப்படத்தில் ஏற்பட்ட பழக்கத்தினால் காதலாக மாறி,சில வருடங்களுக்கு பிறகு இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
திருமணதிற்கு பிறகு திரைபடங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த நடிகை ஜோதிகா பல வருடங்களுக்கு பிறகு 36 வயதினிலே திரைபடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார்.பிறகு நல்ல கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.இன்று இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
நடிகை ஜோதிகாவுக்கு, பெண்களை மையப்படுத்தி எடுக்கட்ட ‘ராட்சசி’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை 90 களின், இடுப்பழகி நடிகை சிம்ரன் ஜோதிகாவுக்கு வழங்கினார்.
இந்த விருது விழாவில், நடிகை ஜோதிகாவிடம் சிலம்பம் சுத்த சொல்லி அனைவரும் கோரிக்கை வைக்க, ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று கொண்ட ஜோதிகா, மேடையில் அனைவர் முன்பும் சுழன்று சுழன்று சிலம்பம் சுற்றி அசத்தியுள்ளார். இது குறித்த காணொளி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
THE REAL SHERO: #Jyothika does the Silambaattam terrifically! #jfwmovieawards2020 pic.twitter.com/jA5jvcTSLc
— JFW (@jfwmagofficial) March 14, 2020