சரவணன் மீனாட்சி சீரியலில் மலர்ந்த காதல்! திருமண கோலத்தில் இருக்கும் ஸ்ரீஜா.!… தீயாய் பரவும் வீடியோ.!
இன்றைய காலகட்டங்களில் சினிமாவை விட தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களையே அதிகமான மக்கள் பார்கின்றனர்.இதனாலேயே சினிமாவை போல் சீரியலில் நடிப்பவர்களுக்கும் ரசிகர்கள் உருவாகிவிடுகின்றனர்.இன்று இளைன்ஞர்களும் சீரியல்கள் பார்க்க தொடங்கிவிட்டனர்.சீரியல் வரலாற்றில் சரவணன் மீனாட்சி சீரியல் யாராலும் மறக்க முடியாத ஒன்று.அந்த வகையில், இந்த செரியல் விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்டது.சரவணன் மீனாட்சி சீரியல் ஹீரோயின் ஸ்ரீஜாவுக்கு பிடித்த காட்சி எது என்று அவரின் காதல் கணவர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
சரவணன் மீனாட்சி சீரியலில் நடிக்கும்போது மிர்சி செந்தில்குமாரும் ஹிரோயினாக நடித்த ஸ்ரீஜாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.இந்த நிலையில், மிர்சி செந்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “சரவணன் மீனாட்சி சீரியலில் ஸ்ரீஜாவுக்கும் மிகவும் பிடித்த காட்சி…
படப்பிடிப்புக்கு இடையே செட்டிநாடு வீடுகளை சுற்றிப்பார்க்க அனுமதிக்கப்பட்டோம்.நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். அது என்றைக்கும் மறக்கமுடியாத நாள்” என்று குறிப்பிட்டு ஒரு வீடியோவைப் பதிவிட்டுள்ளார்.
வீடியோவில், மீனாட்சி, “ஆமாடா, உன்னைமட்டும்தான் புடிக்கும். உன்னை மாதிரி கோடி பேரை கொண்டுவந்து நிறுத்தினாலும் எனக்கு உன்னதான் புடிக்கும். ஏனென்றால், உன்னைதானே நான் காதலிக்கிறேன். வா போலாம்.” என்று கூறுகிறார்.
குறித்த காட்சியை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.