முதன் முறையாக மகளின் புகைப்படத்தை வெளியிட்ட சஞ்சீவ்.. என்ன கூறியுள்ளார் தெரியுமா? அழகிய புகைப்படம்.!குவியும் வாழ்த்துக்கள்..!

0

பிரபல சின்னத்திரை ஜோடியான ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான தொடர் ராஜா ராணி.இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் ஆல்யா மானசா.அதே தொடரில் தன்னுடன் நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சினிமாவில் ஒன்றாக காதலித்து திருமணம் செய்வது போல் சின்ன திரையில் ஒன்றாக நடித்தவர்களும் இப்பொழுதெல்லாம் திருமணம் செய்துகொள்கின்றனர்.இருவரும் வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதல் திருமணத்துக்கு ஆல்யாவின் வீட்டில் எதி ர்ப்பு எழுந்தது.இருந்த போதும் சஞ்சீவ் குடும்பத்தினர், நண்பர்கள் வாழ்த்த இனிதே திருமணத்தை நடத்தி முடித்தி வாழ்க்கையை தொடங்கினர்.

இதையடுத்து அண்மையில் ஆல்யா மானஸாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தங்களின் குழந்தைக்கு அய்லா என பெயர் சூட்டி மகிழ்ந்தனர் இருவரும்.

இந்நிலையில் சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையின் போட்டோவை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”ஆல்யாவுக்கு இன்ஸ்டாகிராமில் இரண்டு மில்லியன் ஃபாலோயர்ஸ்கள் வந்திருக்கிறார்கள்.

இந்த ஸ்பெஷலான நாளில் எங்கள் குட்டி இளவரசி அய்லாவை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். உங்கள் அனைவரின் ஆசிர்வாதங்களும் அவளுக்கு கிடைக்கட்டும்’ என பதிவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.