படப்பிடிப்பு தளத்தில் இந்த நடிகையை நடிகர் விஜய் ஓட ஓட துரத்தியுள்ளாராம்..! அவரே வெளியிட்ட தகவல்

0

மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக பிரபலம் அடைந்த நடிகை நீபா, அதன் பின்னர் துணை நடன இயக்குனராக பணிபுரிந்தார். அதற்கு பிறகு நடிகர் விஜய்யின் காவலன் திரை படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்., இதனால் சினிமாத் துறையிலும் நடிகை நீபா பிரபலமானார். இதன் பின்னர் இவர் சீரியல்களில் நடித்து சின்னத்திரையிலும் பிரபலமானார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது.
நான் சிறுவயதிலேயே சினிமாவுக்கு வந்துவிட்டேன். என்னுடைய இயற்பெயர் சண்முகப்பிரியா. கவியாஞ்சலி சீரியலில் நடிக்க ஆரம்பித்த பிறகுதான் என் பெயரை நீபா என்று மாற்றி வைத்துக் கொண்டேன். நடிகர் விஜய் நடித்த புதிய கீதை திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு துணை நடன இயக்குனராக பணியாற்றினேன். சூட்டிங் முடிந்த பிறகு விஜயுடன் ஓடிப் பிடித்து விளையாடுவோம். அந்த அளவுக்கு சூட்டிங் ஸ்பாட்டில் ஜாலியாக இருந்தோம்.

அதற்குப் பிறகு பல வருடங்களுக்கு பிறகு காவலன் திரைப்படத்தில் நடிகர் விஜயுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கு இடைப்பட்ட நாட்களில் அவருடன் பேசுவதற்கு கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆகையால் அவர் என்னை ஞாபகம் வைத்து இருப்பாரா என்ற தயக்கத்தோடு அவரிடம் நான் சென்று பேசினேன். என்னை பார்த்ததும் நடிகர் விஜய் உன் பெயர் பிரியா தானே. ஏன் நீபா என்று மாற்றி வைத்துக் கொண்டாய் என அவர் கேட்டார். அவர் என்னை மறக்காமல் ஞாபகம் வைத்திருந்தது எனக்கு மிகவும் வியப்பைத் தந்தது…

மிகப்பெரிய நடிகர்களாக வளர்ந்த எந்த ஒரு நடிகரும் பழசை மறக்க மாட்டார்கள் என்று அன்றுதான் நான் புரிந்து கொண்டேன். அதனால்தான் அவர்கள் அவ்வளவு பெரிய நடிகர்களாக திரையுலகில் இருக்கிறார்கள் எனவும் தெரிந்து கொண்டேன். திருமணத்திற்கு பிறகு நான் நடிப்பதில் என் கணவருக்கு உடன்பாடில்லை. என் கணவரிடம் பல பேர் ஒரு திறமையான பெண்ணை ஏன் வீட்டிலேயே வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டு வந்தனர்.

ஒரு கட்டத்தில் மனம் மாறி என் கணவர் நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு வந்தால் மீண்டும் நீ மீண்டும் நடிக்க தொடங்கு என்று கூறினார். அந்த சமயத்தில்தான் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இருந்து எனக்கு சூப்பர் மாம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இப்போது அந்த நிகழ்ச்சியில் தான் பிசியாக இருந்து வருகிறேன் எனவும் நடிகை நீபா கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்பெல்லாம் திரைப்படங்களில் கவர்ச்சியாக நடிப்பதற்கு தனியாக நடிகைகள் இருப்பார்கள்.

ஆனால் தற்போதைய காலகட்டங்களில் கதாநாயகிகளே க வர்ச்சியாக நடிக்க தொடங்கி விட்டார்கள். ஆனால் என்னைப்போல நடிகைகள் கவர்ச்சியாக நடித்தால் மட்டும் தவறாக பேசுகிறார்கள். என்னுடைய தந்தை உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரது சிகிச்சை செலவுக்காக தான் கவர்ச்சியாக நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது எனக்கும் கவர்ச்சியாக நடிப்பதற்கு விருப்பமில்லை எனவும் நடிகை நீபா கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.