S.P.B உடல்நிலை கவ லைக்கி டமாக இருக்கும் நிலையில், தற்போது அவரது மனைவிக்கு கொ ரோ னா தொ ற்று உறுதி..! – சோ கத்தில் திரையுலகம்..!

0

பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி.பி பாலசுப்ரமணியம் கொ ரோ னா காரணமாக உடல் நிலை கவ லைக் கி டமாக இருக்கும் நிலையில், அவரது மனைவிக்கும் கொ ரோ னா உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் பிரபல பாடகர் SP.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி அன்று சென்னை சூளைமேட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.

எஸ்பிபி-க்கு லேசான கொ ரோ னா அறிகுறிகள் இருப்பதாகவும், ஆக்ஸிஜன் செறிவு சீராக இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் நேற்று ஆகஸ்ட் 13-ஆம் தேதி அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், ஆகஸ்ட் 13-ஆம் திகதி நள்ளிரவு முதல் SPB-யின் உடல்நிலை மோ சம டைந்து வருவதாக இன்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. அதில், அவருக்கு சிகிச்சை அளித்து வரும் உயர்மட்ட மருத்துவக்குழு வழங்கிய ஆலோசனையின் படி எஸ்பிபி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவர் வென்டிலேட்டர் உதவியுடன் இருக்கிறார் மற்றும் அவரது உடல்நிலை தொடர்ந்து கவ லைக்கி டமாக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் அவரது ஒட்டு மொத்த திரையுலகமே சோகத்தில் இருக்கும் நிலையில், தற்போது அவரது மனைவிக்கும் கொ ரோ னா உறுதி செய்யப்பட்டுள்ளது, இந்த செய்தி மேலும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.