நடிகர் ராஜ்கிரண் முதல் மனைவி இவர்தான்… 50 வயதில் இரண்டாவது திருமணம் செய்ய காரணம் என்ன?

0

குணச்சித்திர கதாபாத்திரங்களுக்கு பெயர் போன நடிகர் ராஜ்கிரணின் குடும்பப்புகைப்படங்கள் தற்போது இணையத்தில் உலாவி வருகின்றது. ராஜ்கிரணின் குடும்பம் மிக எளிய குடும்பம் என்றாலும் இவருடைய பெற்றோர்கள் இவரை ராஜாவாகதான் வளர்த்துள்ளார்கள். இவர் சினிமா திரையுலகில் நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பணிபுரிந்திருக்கிறார். இவருடைய உண்மையான பெயர் காதர் மொய்தீன். திரை உலகிற்கு இவர் ராஜ்கிரண் என்ற பெயரை மாற்றிக் கொண்டார். ஓடாத படங்களை கூட வெற்றி படங்களாக மாற்றி உள்ளார்.இந்நிலையில் இவர் சினிமா திரையுலகில் புதுமுக நடிகர்களை அறிமுகம் செய்ததும் இவர் தான். நகைச்சுவை நடிகர் வடிவேலை திரையுலகிற்கு அறிமுகம் செய்தது இவர்தான். இவர் இவ்வளவு பிரபலமாக இருந்தாலும் இதுவரை தமிழில் சினிமா திரை உலகில் 30 படங்கள் மட்டும் தான் நடித்துள்ளார்.

மேலும்,இவரே சில படங்களை தயாரித்தும், இயக்கியும் உள்ளார். இவர் கடைசியாக விஷால் நடிப்பில் வெளிவந்த சண்டக்கோழி 2 படத்தில் நடித்திருந்தார். இவருடைய படங்கள் எல்லாம் கிராமப்புற கதைகளை மையமாகவும், காதல் காவியங்களை கொண்ட கதையாகவும் இருக்கும். இவர் நிஜ வாழ்க்கையில் ரொம்ப அமைதியான, சாந்தமான மனிதர்.

இப்படி போய்க் கொண்டிருக்கும் நிலையில் இவருடைய குடும்ப வாழ்க்கையில் பல பிரச்சினைகள் ஏற்பட்டது. செல்லம்மா என்ற பெண்ணை மணந்த நிலையில் குறுகிய காலத்திலேயே அவரை பிரிந்தார். அவர்களுக்கு இடையில் உள்ள கருத்து வேறுபாடுகளே பிரிவுக்கு காரணம்.

அதன் பின்னர் அவரின் வாழ்க்கை கஷ்டமாகவே நகர்ந்தன. அமைதியில்லாமல் தவித்துள்ளார். பின்னர் பத்மஜோதியை 2 வது திருமணம் செய்ததுள்ளார். அதன் பிறகுதான் வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தற்போது இரண்டு பிள்ளைகளுடன் வாழ்க்கையை சந்தோஷமாக கொண்டு செல்லுகின்றார்.

Leave A Reply

Your email address will not be published.