அம்மாவை அப்பா ஏன் விவாகரத்து பண்ணுனாங்கனா..? முதல் முறையாக உண்மையை உடைத்த கமல் மகள்! –

0

தமிழ் சினிமாவில் ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் உலகநாயகனின் மகள் ஸ்ருதிஹாசன். அந்த படத்திற்கு பின்னர் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி கதாநாயகிகளில் ஒருவரானார். இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் தனது பெற்றோர்கள் வாழ்க்கை பற்றி முதன்முறையாக மனம் திறந்துள்ளார். என்னுடைய வாழ்க்கையிலும் மிக முக்கியமான பாகம் என்றால் அது என்னுடைய அப்பா கமல்ஹாசன் மற்றும் அம்மா சரிகா தான். பொதுவாக அப்பா அம்மா பிரிந்து வாழ்ந்தால் மற்றவர்களுக்கு வேண்டுமானால் செய்தியாக இருக்கலாம்.

ஆனால் வீட்டில் உள்ளவர்களுக்கு அது மிகவும் வருத்தமான ஒன்றாகவே இருந்தது. ஆனால் என்னைப் பொறுத்தவரையில் எனது அப்பா அம்மா பிரிந்தது எனக்கு மகிழ்ச்சியான விஷயம் ஆகும். ஏனென்றால் என் அப்பா அம்மா இருவருமே மிக பெரிய நடிகர்கள். இருவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொண்டு, நிம்மதி இல்லாமல் இருப்பதை விட இருவரும் தனித்தனியாக பிரிந்து அவரவர்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதே சிறந்த விஷயமாகும்.

என் அப்பா அம்மா இருவரும் பிரிந்தது கஷ்டமாக இருந்தாலும் அவர்கள் சேர்ந்து வாழும் போது நிறைய பிரச்சனைகளை உருவாகியது. என் அப்பா அம்மா இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவர்கள் இருவரும் மீண்டும் சேர்ந்தால் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு மன நிறைவு இல்லாமல் தான் இருப்பார்கள். அதனால் தான் நான் அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் நான் ஈடுபடவில்லை எனவும் நடிகை ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.