விண்ணைத்தாண்டி வருவாயா-2வை கலாய்த்து எடுத்த ரசிகர்கள், அப்படி என்னதான் அந்த காட்சியில் இருக்கு தெரியுமா!!

0

விண்ணைத்தாண்டி வருவாயா 2010ம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம். இத்திரைப்படத்தின் இயக்குனர் கௌதம் மேனன். சிலம்பரசன், த்ரிஷா மற்றும் கணேஷ் ஜனார்தனன் (இப்படத்திற்குப் பின் இவர் விடிவி கணேஷ் என்று அழைக்கப்படுகிறார்) ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 2009ம் ஆண்டின் முற்பகுதியில் துவக்கப்பட்ட இத்திரைப்படம் பிப்ரவரி 26, 2010 ல் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.

இத்திரைப்படத்தினை கௌதம் மேனனின் நண்பர்களான மதன், கணேஷ் ஜனார்தனன், எல்ரெட் குமார் மற்றும் ஜெயராமன் அவர்கள் தயாரிக்க, ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். 7 வருடங்களின் பின் கௌதம் மேனன் இத்திரைப்படத்தின் 2ம் பாகத்தை உருவாக்க உள்ளதாகவும், அதில் சிலம்பரசன் அடங்கலாக 6 நடிகர்கள் நடிக்கவுள்ளதாகவும் கூறினார்.

அப்படத்தை ரசிகர்கள் தலையில் வைத்து கொண்டாடுவார்கள். இந்நிலையில் தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தின் ஒரு காட்சியை கௌதம் குறும்படம் போல் வெளியிட்டார்.

அதில் தன் கணவர் உன்னிடம் பேச அனுமதி கொடுத்துவிட்டார், நீ என்னுடைய 3வது குழந்தை மாதிரியான வசனங்கள் ரசிகர்கள் கலாய்த்து எடுத்து வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.