யப்பா… குழந்தையில் கூட இவ்வளவு அழகா? நயன்தாராவின் அரிய குழந்தை புகைபடத்தை பார்த்து சொக்கி போன ரசிகர்கள்.!
நயன்தாரா, தமிழ் சினிமாவிற்கு வந்து 15 வருடங்கள் ஆகியும் இன்றும் முதல் இடத்தில் முன்னணி நாயகியாக இருந்து வருகிறார். ஹரி இயக்கத்தில் “ஐயா” படத்தில் அறிமுகம் ஆன நயன்தாரா முதலில் ஒரு மலையாள சேனல்லில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். அதன் பின் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர்க்கு மக்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து தமிழில் நிறைய படங்கள் நடித்தார். தெலுகு மொழிகளிலும் நடிக்க வாய்ப்பு வந்ததால் தெலுங்கு படங்களையும் தேர்ந்து எடுத்து நடிக்க தொடங்கினர்.
இவர் இன்று தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கும் அளவிற்கு முன்னேறியுள்ளார்.இன்று சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும் நயன்தாரா தனது சினிமா பயணத்தில் பல்வேறு ச ர்ச்சைகளை சந்தித்தவர். சிம்பு, பிரபுதேவாவுடன் காதல் ச ர்ச்சைகளில் சிக்கி பல்வேறு இ ன்னல்களை சந்தித்தவர். தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்துவருகிறார் நயன்தாரா. விரைவில் திருமணம் செய்துக்கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இன்று தென் இந்திய சினிமா துறையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார்.இவரின் அழகுக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.இன்றளவும் அவரின் சினிமாவை பார்க்க முன்னணி நடிகர்களுக்கு இருக்கும் அளவுக்கு மிக பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளதால் உப்போளுதும் முதல் நாள் ஷோ ஹவுஸ் புல் தான்.
இவர் நடிப்பில் கடைசியாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் நடிப்பில் நடித்திருந்த ‘தர்பார்’ திரைப்படத்தினைத் தொடர்ந்து தற்போது நெற்றிக்கண் , அண்ணாத்த, மூக்குத்தி அம்மன், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில், தற்போது ஊரடங்கின் காரணமாக கிடைத்த ஓய்வை, காதலனுடன் ஜாலியாக கழித்து வரும் நயன்தாராவின் இதுவரை யாரும் கண்டிராத சிறுவயது புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி தன்னுடைய அம்மாவிற்கு, அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.