இன்று புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகை சிறுவயதில் பட்ட கஷ்டம் தெரியுமா? மனம்திறந்த ஸ்ரீபிரியா
சிறுவயது முதலே குடும்பத்தின் கஷ்ட நஷ்டங்களை தனது அம்மா சொல்லி சொல்லி வளர்த்ததாகவும், இதனால் இன்றும் எளிமையான வாழ்க்கை முறையையே தாம் பின்பற்றுவதாகவும் கூறுகிறார் நடிகை ஸ்ரீபிரியா.நாளை உலகமெங்கும் அன்னையர் தினம் கொண்டாடப்படும் சூழலில் தாய்மையின் நேசத்தையும், பாசத்தையும் நடிகையும், மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகியான ஸ்ரீபிரியா தனது தாயின் நினைவுகளையும், பெருமைகளையும் கூறியுள்ளார்.
”எனது அம்மாவை நான் அக்கா எல்லோரும் அழகி என்று தான் அழைப்போம். ஏனென்றால் அவர் எங்களை விட அழகாக இருப்பார்.
அம்மா பரதநாட்டிய கலைஞர். மிடில் கிளாஸ் குடும்பமாக இருந்தாலும் என்னை சர்ச் பார்க் கான்வெண்டில் சேர்த்து படிக்க வைத்தார்.