‘என்ன தவம் செஞ்சி புட்டோம்’என்ற பாடலுக்கு விஜய்யின் ரீல் தங்கை மல்லிகாவை ஞாபகம் இருக்கா? எப்படி இருக்காருன்னு பாருங்கள்!!
மல்லிகா
மலையாள திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை மல்லிகா, சேரன் இயக்கி நடித்திருந்த ஆட்டோகிராஃப் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இப்படத்தை அடுத்து விஜய் நடிப்பில் வெளிவந்த திருப்பாச்சி படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து மிகவும் பிரபலமானார். இப்படத்தில் மல்லிகாவின் கதாபாத்திரம் அனைவரின் மனதையும் கவர்ந்தது.
கடைசியாக இவர் சென்னையில் ஒரு நாள் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இருந்து டோட்டலாக விலகிக்கொண்டார்.
புகைப்படங்கள்
மல்லிகா சினிமாவில் பிஸியாக வலம் வந்த சமயத்திலேயே, திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஆண் குழந்தை உள்ளது. தற்போது சினிமாவில் இருந்து விலகி குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் மல்லிகா, அடிக்கடி கணவர், குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
தற்போது இவர் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.இதோ பாருங்கள்.
View this post on Instagram