குடித்து விட்டு வந்த தந்தையை பார்த்து குட்டி தேவதை செய்த செயலைப் பாருங்க… மகள்களைப் பெற்ற அப்பாக்கள் மிஸ் செய்ய கூடாத காட்சி..!

0

அம்மாக்கள், மகன்களிடம் ரொம்ப பாசம் காட்டுவது போல், அப்பாக்கள் மகள்களிடம் கூடுதலாகவே பாசம் வைத்திருப்பார்கள். மகள்களின் திருமண காலத்தில் தந்தைகளின் உட்சபட்ச பாசம் வெளிப்படுவதைப் பார்க்க முடியும். அப்பா_மகள் உறவின் மேன்மையை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. அதை உணர்ந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.

பாசம் என்பது உறவுகள் மீது செலுத்தப்படும் உன்னதமான அன்பு.அதிலும் தந்தை_மகள் பாசம் அளவிடவே முடியாது. காரணம் பெண்குழந்தைகள் வளர்ந்ததும் பெற்றோரை அவ்வளவு பொறுப்பாக பார்த்துக் கொள்வதுதான். அதேபோல் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் அவர்களது அப்பாவைத்தான் அதிகம் பிடிக்கும்.

இங்கேயும் அப்படித்தான். ஒரு அப்பா நன்றாகக் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். மகள் அதிலும் மூன்று வயதே ஆன அந்த குட்டி மொட்டு தன் அப்பாவிடம் குடிக்க மட்டும் தெரியுதுல்லா..நல்லா சாப்பிடு.

இந்தா இந்த எலும்பை சாப்பிடு. நீயே எலும்பு மாதிரிதான் இருக்க என அட்வைஸ் செய்கிறது. கூடவே அந்த குட்டிதேவதை ‘நீ நல்லா இருந்தா தானப்பா…நாங்க நல்லா இருக்கமுடியும்.’ என ஏக்கத்தோடு சொல்கிறது. மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே கிடைக்கும் பொன்னான தருணம் இது. இதோ நீங்களே இந்த காணொளியைப் பாருங்கள்.

Leave A Reply

Your email address will not be published.