கடைசியா அவர் முகத்தை கூட பார்க்க முடியல.. விஜயகாந்த் நினைவிடத்தில் கண்ணீர் விட்டு அழுத சூர்யா..!
விஜயகாந்த்
பிரபல நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் காலமானார். இவருடைய மறைவு மக்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.கண்ணீர் விட்டு அழுத சூர்யா
தற்போது சூர்யா கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் நேரில் சென்று கண்ணீர் விட்டு அழுது அஞ்சலி செலுத்தினார்.
அதன் பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த சூர்யா, ” அண்ணனின் பிரிவு மிகவும் கஷ்டமாக உள்ளது. சில படங்கள் நடித்த பிறகும் எனக்கு சரியான பாராட்டுக்கள் எதுவும் கிடைக்கவில்லை”.
“அந்த சமயத்தில் தான் அவருடன் சேர்ந்து பெரியண்ணா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அவருடன் சேர்ந்து பணியாற்றும் போது மிகவும் அன்புடன் கவனித்து கொண்டார்.
இறுதி அஞ்சலியின்போது அவருடைய முகத்தை பார்க்க முடியவில்லை என்பது எனக்கு மிகப்பெரிய இழப்பு” என்று கண்கலங்கிய படி சூர்யா கூறியுள்ளார்.