இமான் முன்னாள் மனைவி மோனிகா சொல்வது எல்லாம் பொய்.. பிரபல நடிகை பரபரப்பு பேட்டி..!
பிரபல இசையமைப்பாளர் டி.இமான் சமீபத்தில் அளித்த பேட்டியில் தான் இனி சிவகார்த்திகேயன் உடன் கூட்டணி சேர்ந்து பணியாற்ற வாய்ப்பே இல்லை, அவர் எனக்கு ஒரு பெரிய துரோகத்தை செய்துவிட்டார் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.அந்த துரோகத்தை வெளியில் சொன்னால் குழந்தைகள் எதிர்காலம் பாதிக்கும் என இமான் கூறினார். இது பற்றி இணையத்தில் பல விதமான பேச்சுகள் வர தொடங்கியது.
அதனை தொடர்ந்து இமானின் முன்னாள் மனைவி மோனிகா அளித்த பேட்டியில் ‘சிவகார்த்திகேயன் ஒரு ஜெண்டில்மேன். இமான் எனக்கு இதுவரை எந்த ஜீவனாம்சமும் தரவில்லை. ஏற்கனவே ஒரு பெண்னைபார்த்து வைத்துவிட்டது தான் எனக்கு விவாகரத்து கொடுத்தார்’ என விளக்கம் கொடுத்திருந்தார்.
நடிகை குட்டி பத்மினி பேட்டி
இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி நடிகை குட்டி பத்மினி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் மோனிகா சொல்வது எல்லாம் பொய் என கூறி இருக்கிறார்.
தற்போது வரை இமான் ஜீவனாம்சம் கொடுத்து கொண்டிருக்கிறார். குழந்தைகளை அவர் தான் படிக்க வைக்கிறார். இமான் தற்போது திருமணம் செய்துகொண்டிருக்கும் பெண்ணை விவாகரத்து பின்
நாங்கள் தான் அறிமுகம் செய்து வைத்தோம்.விவாகரத்து முன்பே அவரை சந்தித்தார் என மோனிகா சொல்வது எல்லாம் பொய் என குட்டி பத்மினி கூறி இருக்கிறார்.