மகனின் திருமணம் குறித்து முதன்முதலாக மனம் திறந்த தம்பிராமையா: திருமணத்தில் இருக்கும் சின்ன சிக்கல்!
அர்ஜுனிற்கு சம்மந்தி ஆவது குறித்து முதன்முதலாக மனம் திறந்த நடிகர் தம்பிராமையா.அர்ஜுனின் மகள்
தமிழ் சினிமாவில் விஷால் நடிப்பில் வெளியான ‘பட்டத்து யானை’ திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் ஐஸ்வர்யா அர்ஜுன்.திருமணம் குறித்து முதன்முதலாக மனம் திறந்த தம்பிராமையாஇத்தப்படம் எதிர்ப்பார்த்த அளவில் வரவேற்புக் கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டு சொல்லி விடவா என்றத் திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்தத்திரைப்படமும் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.
தான் நடித்த தமிழ் திரைப்படங்கள் எதுவும் வெற்றிப் பெறாத காரணத்தினால் தமிழ் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி அப்பா அர்ஜுனின் தொழிலைக் கவனித்து வருகிறார்.இந்நிலையில், இவர் பிரபல காமெடி நடிகரான தம்பி ராமையாவின் மகன் உமாபதியை காதலித்து வந்திருக்கிறார்கள். இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்க இருவரும் திருமணம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
திருமணம் குறித்து முதன்முதலாக மனம் திறந்த தம்பிராமையாதம்பி ராமையாவின் மகன் உமாபதி தமிழில் அதாகப்பட்டது மஹா ஜனங்களே என்றத் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.திருமணம் எப்போது
இவர்களின் திருமணம் குறித்து இதுநாள்வரைக்கும் பேசாமல் இருந்த தம்பிராமையா முதன்முறையாக பேட்டியொன்றில் சொல்லியிருக்கிறார்.
அதில், சம்மந்தியான அர்ஜுன் தற்போது லியோ திரைப்படத்தில் பிஸியாக இருக்கிருக்கிறார் அதனால் அக்டோபர் 19ஆம் திகதி வரைக்கும் திருமணம் பேச்சு இல்லை அவரின் படவேலைகள் முடிந்தவுடன் அறிவிப்போம் என்று சொல்லியிருக்கிறார்.
திருமணம் குறித்து முதன்முதலாக மனம் திறந்த தம்பிராமையாமருமகள் குறித்து கேட்டதற்கு தம்பி ராமைய்யா குழந்தைகள் நம்ம மூலமாக வந்தார்களே தவிர நமக்காக வரவில்லை. அவர்கள் விருப்பத்தை ஏற்று நாம் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும். தமிழில் மருமகள் மற்றும் மருமகன் என்கிற இரு நல்ல வார்த்தைகள் உண்டு.திருமணத்துக்குப் பின் ஐஸ்வர்யா எங்க விட்டுக்கு இன்னொரு மகள். அதே போல உமாபதி அர்ஜுன் சார் வீட்டுக்கு இன்னொரு மகன் என்று ஆசையாக பேசியிருக்கிறார்.